
கொடியிடை ஆட்டி…
நடை உடை மாற்றி…
ஊர் முன்னே ஆடுவதுதான்
நடனமென்பது
அக்காலம் பெண்ணே..!
இந்தப் போலியான
நாகரீக உலகிலும்…
எனக்குப் பிடித்தாற்ப் போல்
எளிமையாய் உடையணிந்து…
அமைதியாய்
எனை நோக்கி நடந்து வருகையில்
இதுதான் உண்மையான...
நளினமான...
நடனமென்பேன்..!
இதற்கு நான் என்றென்றும்
ரசிகனென்பேன்..!


0 comments:
Post a Comment